Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

திருமணம்

சிறையா?

முதலில் திருமணம் என்றால் என்ன? என்று பார்த்தால் திருமணம் என்றால் இருமனம் சேர்ந்து ஒருமனதாகும் ஒரு அற்புத நிகழ்வு தான் திருமணம். ஆனால் திருமணம் செய்தவர்களை சந்தித்து திருமணம் பற்றி பேசினால் அவர்களுக்கு நினைவில் வருவது தாம் பட்ட துன்பங்கள் தான்.

பழையகால திருமணங்களின் சந்தோசம் ஒருவாரகாலம் நீடித்தது. நவீன திருமணம் கொஞ்சம் நவீனமடைந்ததால் ஒரு நாளுடன் பூர்த்தியாக்கப்படுகிறது. திருமணம் பற்றி பகவன் "திருமணம் என்பது ஒரு சிறை.அதில் பெண் என்பவள் ஒரு கைதி ,ஆண் என்பவன் சிறை அதிகாரி " என்று கூறியிருக்கிறார்.

திருமணம் காதல் திருமணம்,நிச்சயிக்கப்பட்ட திருமணம் என இருவகைப்பட்டாலும் துன்பம் கஸ்ரம் என்று வரும்போது திருமணம் என்ற ஒரே பார்வையிலேயே பார்க்க வேண்டியிருக்கிறது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தான் துன்பம் வருகின்றது என்று வாழ்க்கைத் துணையை தானே தேடுபவர்களையும் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.

காதலித்தவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று யோசித்தால் முதலிரவோடு விவாகரத்து பெற்றுவிடுகிறார்கள். இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு திருமணம் என்பது விளையாட்டு போல ஆகிவிட்டது.

காதல் திருமணம் என்னும்பொழுது காதலிக்கும் போது நந்தவனமாக தோண்றினாலும் கல்யாணம் எனும் போது போர்க்களமாகவும் நரகமாகவும் மாறுகிறது. இதற்கு காரணம் காதலர்களிடையே காணப்பட்ட புரிந்துணர்வு இன்மையே. மாறாக பாலினக் கவர்ச்சி தான்.

மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும், நினைவுகளையும் மறந்து,முதுமையில் வாடும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே திருமணம் அவசியாமகின்றது. ஜாதங்கள் பார்த்து ,கெட்டிமேளம் கொட்டி செய்வது மட்டும் திருமணம் இல்லை. தன்னை நம்பி வரும் துணைவியை நல்லபடியாக வைத்திருப்பது மட்டுமன்றி,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்வதே திருமணம்.

ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகும் நட்பை வளர்த்துகொண்டு வாழ்ந்தால் திருமணத்தை சிறை என்று சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.ஒரு ஆணுக்கு பெண் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவிற்கு பெண்ணுக்கும் ஆண் முக்கியம். எனவே,இதனை ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் திருமணம் எப்பொழுதும் நந்தவனமாகவே இருக்கும். இருமனம் பூரணமான மனத்துடன் இணைவது தான் திருமணம் இல்லையென்றால் அது வெறுமணம் ஆகிவிடும். திருமணம் செய்யப்போறீங்களா நீங்க எப்படி இருக்க போறீங்க நன்றாக சிந்தித்து செயற்படுங்கள். வாழ்த்துக்கள்...

குறிச்சொற்கள்:
கைதுறப்பு