பொதுவாக பெண்கள் தங்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை.
இதனாலேயே, கழுத்துப்பகுதியில் மருக்கள், தேமல் போன்ற படலங்கள் தோன்ற ஆரம்பித்து நாளடைவில் உடல் அழகையே கெடுத்து விடும்.
பேஷியல் மற்றும் பிளீச்சிங் செய்யும் போது முகத்திற்கு மட்டுமல்ல், கழுத்திற்கும் செய்ய வேண்டும். ஆனால், இதை யாரும் செய்வதில்லை.
தினமும் குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் கழுத்தையும் சேர்த்துக் கழுவ வேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு தாலி கயிறே கூட அலர்ஜியாக இருக்கலாம். அப்படிப்பட்ட பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தாலிக்கயிற்றை மாற்றி வர வேண்டும்.
இன்னும் சிலருக்கு கவரிங் நகை அணிந்தால் கழுத்துப் பகுதியில் அலர்ஜி ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் செயினை வாரம் ஒருமுறை சோப்புத் தண்ணீரும், எலும்மிச்சம் பழச்சாறும் கலந்த கலவையில் போட்டு சுத்தம் செய்து அணிய வேண்டும்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்